சுவையான பக்கோடா குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள்:
கடலை பருப்பு - 1/4கிலோ
பூண்டு - 3பல்
இஞ்சி - 1துண்டு
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
தேங்காய் - 4
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 5
தனியாதூள் - 1ஸ்பூன்
கசகசா - 1ஸ்பூன்
முந்திரிபருப்பு - 10
சோம்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 4
கடுகு - 1/2ஸ்பூன்
உளுந்து - 1ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
புதினா - ஒரு கைப்பிடி
கொத்த மல்லி - சிறிதளவு
செய்முறை :
கடலைப் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, சீரகம், சோம்பு இவற்றைச் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து, அரைத்த பருப்பு விழுதைச் சிறுசிறு உருண்டை களாகப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இஞ்சி பூண்டை நசுக்கி வைத்து கொள்ளவும். மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு,இஞ்சி, நறுக்கிய தக்காளி இவற்றை ஒவ்வொன் றாகச் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் பச்சை மிளகாய்,கசகசா,முந்திரி,தேங்காய் இவற்றை அரைத்துச் சேர்த்து, தனியாதூள் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பிறகு தேவையான உப்பு, சேர்த்து, பொரித்த உருண்டைகளையும் போட்டு கொதித்ததும் புதினா, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான பக்கோடா குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

தேவையான பொருள்கள்:
கடலை பருப்பு - 1/4கிலோ
பூண்டு - 3பல்
இஞ்சி - 1துண்டு
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
தேங்காய் - 4
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 5
தனியாதூள் - 1ஸ்பூன்
கசகசா - 1ஸ்பூன்
முந்திரிபருப்பு - 10
சோம்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 4
கடுகு - 1/2ஸ்பூன்
உளுந்து - 1ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய்தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
புதினா - ஒரு கைப்பிடி
கொத்த மல்லி - சிறிதளவு
செய்முறை :
கடலைப் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, சீரகம், சோம்பு இவற்றைச் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து, அரைத்த பருப்பு விழுதைச் சிறுசிறு உருண்டை களாகப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இஞ்சி பூண்டை நசுக்கி வைத்து கொள்ளவும். மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு,இஞ்சி, நறுக்கிய தக்காளி இவற்றை ஒவ்வொன் றாகச் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் பச்சை மிளகாய்,கசகசா,முந்திரி,தேங்காய் இவற்றை அரைத்துச் சேர்த்து, தனியாதூள் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பிறகு தேவையான உப்பு, சேர்த்து, பொரித்த உருண்டைகளையும் போட்டு கொதித்ததும் புதினா, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான பக்கோடா குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments