தேவையான பொருள்கள் :
அரிசி - 1கப்
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2கப்
நெய் - 3ஸ்பூன்
இஞ்சிபூண்டுவிழுது - 1ஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 2
பிரியாணி இலை - 2
பச்சைமிளகாய் - 3
வெங்காயம் - 2
தக்காளி - 1
புதினா - ஒருகைப்பிடி
கொத்தமல்லி - ஒருகைப்பிடி
தயிர் - 2ஸ்பூன்
லெமன் - 1
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய்,நெய்,ஊற்றி பின் பட்டை,லவங்கம் ,வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.பின் பச்சை மிளகாய் போட்டு பின் தக்காளி போட்டு வதக்கவும் .பிறகு புதினா கொத்தமல்லி, தயிர்,லெமன் சாறு ஊற்றி பின் 2டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவைக்கேற்ப உப்பு போட்டு குக்கரை முடி 1விசில் வந்தும் இறக்கவும் . சுவையான நெய் புலாவ் ரெடி ....
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments