சுவையான கவலை மீன் குழம்பு SAMAYAL TAMIL TIPS

சுவையான  கவலை  மீன் குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .
KavalaiMeenKuzhambu , SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

மீன்                                  -    1/4கிலோ
எண்ணெய்                    -    தேவையான அளவு
கடுகு                               -    1/2ஸ்பூன்
வெந்தியம்                     -    1/2ஸ்பூன் 
வெங்காயம்                  -    4
தக்காளி                         -    3
பச்சைமிளகாய்           -    4
புளி                                  -    லெமன் அளவு
குழம்பு மிளகாய் தூள்-    3ஸ்பூன்
மஞ்சள்தூள்                   -    1ஸ்பூன்
கருவேப்பிலை             -    சிறிது
கொத்தமல்லி               -    தேவையான அளவு

மீன் நன்கு சுத்தம் செய்து மஞ்சள்தூள்-1/2 ஸ்பூன் , கல் உப்பு போட்டு கழுவி வைக்க வேண்டும் .பாத்திரத்தில்  புளி போட்டு தண்ணீர் ஊற்றி உர வைக்க வேண்டும். 

செய்முறை :

கடாயில் எண்ணெயை ஊற்றி, கடுகு,வெந்தியம்,கருவேப்பிலை,தளித்த பின் வெங்காயம் போட வேண்டும் பின் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும் . வதக்கிய பின் தக்காளி போட வேண்டும். மஞ்சள்தூள், குழம்பு மிளகாய் தூள் ,போட்டு நன்கு வதக்கிய பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பின் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும். மீன் வெந்ததும், இறக்கவும்.
சுவையான கவலை மீன் குழம்பு ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி --- 

TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments