ருசியான செட்டிநாடு பீப் குழம்பு SAMAYAL TAMIL TIPS

ருசியான செட்டிநாடு பீப் குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் . 
ChettinadBeefKuzhambu , SamayalTamilTips

தேவையான பொருட்கள் :

பீப்                                        -    1/2கிலோ
வெங்காயம்                    -    2
தக்காளி                            -    3                                       
ஏலக்காய்                         -    3
லவங்கம்                          -    2
சோம்பு                              -    1/2ஸ்பூன்
மிளகாய் தூள்                -    1ஸ்பூன்
மஞ்சள் தூள்                   -    1/4ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள்-     2ஸ்பூன்
கொத்தமல்லி                -     ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது -     4ஸ்பூன்
தேங்காய்                        -     1/4மூடி
மிளகுதூள்                       -    1/2ஸ்பூன்

வேக வைக்க வேண்டியவை :

குக்கரில் கறி போட்டு மஞ்சள்தூள்,வெங்காயம் - 1தக்காளி -1மிளகுதூள்,இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்  ,கொத்த மல்லி ,உப்பு தேவையான அளவு  தண்ணீர் ஊற்ற வேண்டும்.குக்கறை மூட வேண்டும் 5விசில் வந்தும் இறக்கவும்.

செய்முறை :

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை,ஏலக்காய்,லவங்கம் சேர்க்கவும்.பின் பச்சை மிளகாய்,கொத்தமல்லி சேர்த்து சுருள விடவும்.வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.பச்சை வாசனை போனதும் மிளகாய் தூள்,குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.பின் தக்காளியை சேர்த்து குழைய விடவும்.மசாலாவில் எண்ணெய் பிரிந்து வந்ததும். அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். தேவைக்குஏற்ப  தண்ணீர் ஊற்றி   உப்பும் சேர்க்கவும் நன்கு கொதி வந்த பிறகு  பீப் சேர்க்கவும்.வெந்ததும் பரிமாறலாம் .ருசியான செட்டிநாடு பீப் குழம்பு ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---


TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments