சுவையான பீப் உருண்டை கறி குழம்பு SAMAYAL TAMIL TIPS

சுவையான  பீப் உருண்டை கறி  குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் . 
BeefUrandaiKuzhambu , SamayalTamilTips

தேவையான பொருட்கள் :

பீப்                                       -    1/2கிலோ
வெங்காயம்                     -    2
தக்காளி                            -    3
பட்டை                               -    1
ஏலக்காய்                         -    3
லவங்கம்                          -    2
சோம்பு                             -    1/2ஸ்பூன்
மஞ்சள் தூள்                   -    1/4ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் -     2ஸ்பூன்
கொத்தமல்லி                -     ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது  -     4ஸ்பூன்

அரைக்க தேவையான பொருள்கள் :

பீப் நன்கு சுத்தம் செய்து வைக்க வேண்டும் . பீப் ,லவங்கம்-2 ,பட்டை -2சேர்த்து மிக்சியில் அரைக்க வேண்டும் .அரைத்து வைத்த கறி ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும் .பின் கறி உருண்டை பிடித்து தனியாக எடுத்து வைக்க வேண்டும் .

தேங்காய்                       -     1/4மூடி
பச்சை மிளகாய்,          -    2
சோம்பு                            -    1ஸ்பூன்
தேங்காய் .பச்சை மிளகாய் ,சோம்பு தனியாக அரைத்து கொள்ள வேண்டும் .

செய்முறை :

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை,ஏலக்காய்,லவங்கம் சேர்க்கவும்.வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.பச்சை வாசனை போனதும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.பின் தக்காளியை சேர்த்து குழைய விடவும்.மசாலாவில் எண்ணெய் பிரிந்து வந்ததும்.அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். தேவைக்குஏற்ப  தண்ணீர் ஊற்றி   உப்பும் சேர்க்கவும்.நன்கு கொதி வந்த பிறகு சேர்க்கவும்.அரைத்து வைத்த கறி உருண்டை குழம்பில் போட வேண்டும் .பின் வெந்ததும் கொத்த மல்லி தூவி பரிமாறலாம்.
 சுவையான  பீப் உருண்டை கறி குழம்பு ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments