கமகம சுவையான செட்டிநாடு காடை பிரியாணி SAMAYAL TAMIL TIPS

கமகம சுவையான  செட்டிநாடு  காடை பிரியாணி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .


KadaiBiryani, SamayalTamilTips

தேவையானவை :

காடை                               -     1/2கிலோ
சீரகச் சம்பா அரிசி     -     1/2கிலோ
எண்ணெய்                     -     தேவையான அளவு 
நெய்                                  -     4ஸ்பூன் 
வெங்காயம்                  -      3
தக்காளி                          -      2
பச்சை மிளகாய்          -      5
புதினா இலை               -      1/2கப் 
கொத்தமல்லி               -      1/2கப் 
தயிர்                                 -      1/4கப் 
தேங்காய்ப்பால்          -     1கப் 
பட்டை                             -      2
ஏலக்காய்                       -      2
கிராம்பு                           -      4
பிரிஞ்சி இலை              -     1
இஞ்சி,பூண்டுவிழுது  -     3ஸ்பூன் 
உப்பு                                  -     தேவையான அளவு 
மிளகாய்த்தூள்             -      1ஸ்பூன்
மஞ்சள் தூள்                   -      1/2ஸ்பூன்
பிரியாணிமசாலாதூள்-    1ஸ்பூன்  

செய்முறை :

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து அது கரையும் வரை வதக்கவும்.அதில் கழுவி சுத்தம் செய்த காடையை இத்துடன் சேர்த்து வதக்கவும்.அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,பிரியாணி மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும். பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.
கமகம் சுவையான  செட்டிநாடு காடை பிரியாணி ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

truckoholics ads


Post a Comment

0 Comments