சுவையான சுறா புட்டு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள்:
சுறா மீன் - 250கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
மிளகாய் தூள் - 2ஸ்பூன்
மல்லித் தூள் - 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதிக்கும் போது, அதில் மீன் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி மீன் துண்டுகளை ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மீன் நன்கு குளிர்ந்ததும், அதன் மேல் உள்ள தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு, உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு,கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு மசாலா மீனில் சேரும் வரை கிளறி விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.சுவையான சுறா புட்டு ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள்:
சுறா மீன் - 250கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
மிளகாய் தூள் - 2ஸ்பூன்
மல்லித் தூள் - 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதிக்கும் போது, அதில் மீன் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி மீன் துண்டுகளை ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மீன் நன்கு குளிர்ந்ததும், அதன் மேல் உள்ள தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு, உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு,கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு மசாலா மீனில் சேரும் வரை கிளறி விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.சுவையான சுறா புட்டு ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments