காளான் குருமா குழம்பு SAMAYAL TAMIL TIPS

காளான் குருமா குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.

KalanKurmaKuzhambu,SamayalTamilTips


தேவையான பொருட்கள் :

காளான்                         -       250கிராம்
சோம்பு                           -      1/2ஸ்பூன்
கசகசா                           -      1/2ஸ்பூன்
பட்டை                            -         2
இலை                              -         2
சின்ன வெங்காயம்  -        150
தக்காளி                         -         2
தேங்காய்                      -     1/2மூடி
மிளகு                              -      1ஸ்பூன்
சீரகம்                              -      1ஸ்பூன்
மல்லிதூள்                     -      2ஸ்பூன்
மிளகாய்தூள்              -       2ஸ்பூன்
மஞ்சள்தூள்                  -       1/2ஸ்பூன்
உப்பு                                -        தேவைக்கேற்றவாறு
இஞ்சிபூண்டுவிழுது -         2ஸ்பூன்

காளான்களைக் கழுவிச் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:

சோம்பு ,பட்டை,கசாகசா–சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். தனியாக தேங்காய், மிளகு,சீரகம் முன்றையும் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

செய்முறை :

குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை போட்:டு தாளித்து வெங்காயம் போட்ட வதக்கி தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.அரைத்த பட்டை கசாகசா சேர்த்து நன்கு  வதக்கி பின் இஞ்சிபூண்டுவிழுது அதனுடன் மிளகாய்தூள், மல்லிதூள், மஞ்சள்தூள்,போட்டு வதக்கி ,காளான் சேர்த்து வதக்கி அதனுடன்அரைத்த தேங்காய் சேர்த்து குக்கரில் 2 விசில் இறக்கி கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.சுவையான காளான் குருமா குழம்பு ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

truckoholics ads


Post a Comment

0 Comments