எளிதான முறையில் மோர் குழம்பு செய்வது எப்படி என்பதை சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 2ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
வெந்தயம் - 1/2ஸ்பூன்
மிளகாய் - 4
கறிவேப்பிலை - 10
சின்ன வெங்காயம் - 50கிராம்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்
துவரம் பருப்பு - 2ஸ்பூன்
இஞ்சி - 1துண்டு
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1ஸ்பூன்
தயிர் - 1/2லிட்டர்
மிக்ஸில்,துவரம் பருப்பு ,இஞ்சி,பச்சை மிளகாய்,சீரகம்,அரைக்க வேண்டும். பின் தயிர் தனியாக அரைக்க வேண்டும்.
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்.
கடுகு,jவெந்தயம்,கறிவேப்பிலை,மிளகாய்,போட்டு தாளிக்கவும்.பின் சின்ன வெங்காயம்,போட்டு வதக்கவும்.பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும்.மஞ்சள் தூள்,சேர்க்கவும்.தேவைக்குஏற்ப தண்ணீர் ஊற்றி உப்பும் சேர்க்கவும்.ஒரு கொதி வந்த பிறகு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். .எளிதான முறையில் மோர் குழம்பு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---


0 Comments