சுவையான மட்டன் பிரியாணி பாசுமதி அரிசியில் செய்வது எப்படிஎன்று இங்கு சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - 1 கிலோ
பாசுமதி அரிசி - 1/2 கிலோ
எண்ணெய் - 500 ml
நெய் - 1/4 கப்
பிரியாணிஇலை - 2
பட்டை - 2
ஏலக்காய் - 2
லவங்கம் - 2
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி,பூண்டு விழுது - 4ஸ்பூன்
கடைந்த தயிர் - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4ஸ்பூன்
உப்பு - 2ஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மல்லி தூள் - 2ஸ்பூன்
பிரியாணி மசாலா - 2ஸ்பூன்
மட்டன்தூள் - 1ஸ்பூன்
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1கைப்பிடி
லெமன் - 1
வேகவைக்க வேண்டியவை:
முதலில் குக்கரில் மட்டன்,போட்டுஅத்துடன்,மஞ்சள்தூள்,இஞ்சி,பூண்டு விழுது,உப்பு ,பிறகு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
முதலில்,குக்கரில்,எண்ணெய்,நெய்,விட்டுபிரியாணிஇலை,பட்டை,ஏலக்காய்,லவங்கம்,சேர்க்கவும்.அதனுடன் நறுக்கின வெங்காயம் நன்கு வதக்கவும்.பின் தக்காளி போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.வேகவைத்த மட்டன் போட வேண்டும். மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,பிரியாணி மசாலாதூள்,மட்டன்தூள்,போட்டு,வதக்கவும்.பின்,தயிர்,லெமன்,புதினா,கொத்தமல்லி,போட்டு நன்கு வதக்கவும்.பிறகு 3டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பாசுமதி அரிசி 5 நிமிடம் உர வைக்கவேண்டும்.பின் அரிசி போட வேண்டும்.குக்கரை மூடி வைத்து 1 விசில் விட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும்.குக்கரில் சுவையான மட்டன் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments