காய் சாம்பார் குழம்பு செய்வது எப்படிஎன்பதை Samayal Tamil Tips

வாருங்கள் காய் சாம்பார் குழம்பு செய்வது எப்படி என்பதை சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்..



தேவையான பொருட்கள் :

கடுகு                                -         1ஸ்பூன்
உளுத்தம் பருப்பு        -         1ஸ்பூன்
சீரகம்                               -         1ஸ்பூன்
பெருங்காயத் தூள்     -         1/2ஸ்பூன்
எண்ணெய்                     -          2ஸ்பூன்
நெய்                                  -           2
வெங்காயம்                   -          1
தக்காளி                           -          3
சின்ன வெங்காயம்     -          50கிராம்
தண்ணீர்                           -         10/கப்
மஞ்சள் தூள்                   -        1/2ஸ்பூன்
சாம்பார்தூள்                   -        1ஸ்பூன்
மிளகாய்தூள்                  -         2ஸ்பூன்
துவரம் பருப்பு                 -         100கிராம்
புளிச்சாறு                         -          லெமென் அளவு
கொத்தமல்லி                 -          சிறிது
பச்சை மிளகாய்            -          2
பூண்டு                               -          10பல்
பீன்ஸ்                               -          10
பட்டாணி,                        -          10
உருளைக் கிழங்கு,      -          1
கத்திரிக்காய்                  -          3
கேரட்                                -          2
முள்ளிங்கி                     -          1
அவரக்காய்                    -            10
முருங்கைக்காய்         -        1
                             
வேகவைக்க வேண்டியவை: 

முதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் பச்சை மிளகாய் - 2  வெங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

தாளிக்கும் முறை: 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள், பூண்டு, தாளிக்கவும்.வெங்காயம்,சின்ன வெங்காயம்-10, பச்சை மிளகாய், தக்காளி வதக்கிக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள,காய் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.பின்னர் உப்பு தூவிவிடவும் சாம்பார்தூள்,  மிளகாய்தூள்,சேர்த்து கிளறி, தண்ணீர், புளிச்சாறு சேர்த்து, மூடி வைத்து நன்கு வேக வைக்க வேண்டும் பின் மூடியைத் திறந்து, பருப்பை மசித்து ஊற்றி ஒரு கொதி வந்ததும்,ஒருவாணலியைஅடுப்பில்,வைத்துநெய்,ஊற்றிகாய்ந்ததும்.கடுகு,கருவேப்பிலை,வதக்கவும்.தாளித்த ஊற்றி பின் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.ஸ்பெஷல் காய் சாம்பார் ரெடி.


இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..


                                                       
truckoholics ads

Post a Comment

0 Comments