சுவையான இறால் உருண்டை குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள் :
இறால் - 3/4கிலோ
கடலை மாவு - 1/2கப்
சின்னவெங்காயம் - 150கிராம்
வெங்காயம் - 3
தக்காளி - 4
மீன் வறுவல் மசாலா- 50கிராம்
மிளகாய்த் தூள் - 2ஸ்பூன்
மிளகுத்தூள் - 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
கசகசா - 1ஸ்பூன்
இஞ்சிபூண்டுவிழுது - 3ஸ்பூன்
தேங்காய் - 1/2மூடி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
இறாலை நன்றாக சுத்தம் செய்து வெது வெதுப்பான நீரில் முக்கி எடுத்து தனியே வைக்கவும்.
சின்ன வெங்காயம், சோம்பு, சீரகம், கசகசா ஆகிய வற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும். தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மீன் வறுவல் மசாலா, மிளகுத் தூள், 1ஸ்பூன் இஞ்சி பூண்டுவிழுது அரைத்து வைத்த மசாலா போட்டு உப்பு சேர்த்து,சிறிதளவு தண்ணீர் விட்டு திக்கான மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும்.பின்னர் ஒவ்வொரு இறாலாக தனியாக எடுத்து மாவுடன் உருட்டி, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வேக விடவும்.தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகிய வற்றை சேர்த்து வதக்கிய பின்னர், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் கலந்து, திக்கான பதம் வந்ததும் பொரித்த இறால் உருண்டை களை சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து வேக விடவும்.பிறகு, கொத்த மல்லி தூவி இறக்கினால் சுவையான இறால் உருண்டை குழம்பு ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி --

தேவையான பொருட்கள் :
இறால் - 3/4கிலோ
கடலை மாவு - 1/2கப்
சின்னவெங்காயம் - 150கிராம்
வெங்காயம் - 3
தக்காளி - 4
மீன் வறுவல் மசாலா- 50கிராம்
மிளகாய்த் தூள் - 2ஸ்பூன்
மிளகுத்தூள் - 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
சோம்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
கசகசா - 1ஸ்பூன்
இஞ்சிபூண்டுவிழுது - 3ஸ்பூன்
தேங்காய் - 1/2மூடி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
இறாலை நன்றாக சுத்தம் செய்து வெது வெதுப்பான நீரில் முக்கி எடுத்து தனியே வைக்கவும்.
சின்ன வெங்காயம், சோம்பு, சீரகம், கசகசா ஆகிய வற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும். தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மீன் வறுவல் மசாலா, மிளகுத் தூள், 1ஸ்பூன் இஞ்சி பூண்டுவிழுது அரைத்து வைத்த மசாலா போட்டு உப்பு சேர்த்து,சிறிதளவு தண்ணீர் விட்டு திக்கான மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும்.பின்னர் ஒவ்வொரு இறாலாக தனியாக எடுத்து மாவுடன் உருட்டி, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வேக விடவும்.தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகிய வற்றை சேர்த்து வதக்கிய பின்னர், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் கலந்து, திக்கான பதம் வந்ததும் பொரித்த இறால் உருண்டை களை சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து வேக விடவும்.பிறகு, கொத்த மல்லி தூவி இறக்கினால் சுவையான இறால் உருண்டை குழம்பு ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி --



0 Comments