சுவையான கொத்துக் கறி புலாவ் SAMAYAL TAMIL TIPS

சுவையான மட்டன் கொத்துக் கறி புலாவ் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்:

எண்ணெய்                       -     தேவையான அளவு
பிரியாணி இலை          -     2
பட்டை                                -     2
மட்டன்கொத்துக் கறி -     1/2கிலோ
அரிசி                                  -     1/2கிலோ
வெங்காயம்                    -     2
தக்காளி                            -     1
இஞ்சிபூண்டுவிழுது    -     2ஸ்பூன்
புதினா                              -     ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய்           -     5
மஞ்சள் தூள்                   -     1/2ஸ்பூன்
உப்பு                                  -     தேவைக்கேற்ப

செய்முறை :

குக்கரில் கொத்துக் கறியுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். சாதத்தை சிறிது உப்பு போட்டு உதிரியாக வடித்து வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை,பிரியாணி இலை, போட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.தக்காளி  நறுக்கிய பச்சை மிளகாய் புதினா சேர்த்து வதக்கவும்.பின்னர் அதனுடன் வேக வைத்த கொத்துக் கறி சேர்த்து தேவைப் பட்டால் உப்பு போட்டு நீர் சுண்டும் வரை கிளறவும்.பின் வடித்த சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான கொத்துக் கறி புலாவ் ரெடி...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments