சுவையான இறால் புலாவ் SAMAYAL TAMIL TIPS

சுவையான இறால் புலாவ் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
Iralpulvo ,SamayalTamilTips

தேவையான பொருட்கள் :

இறால்                              -     1/2கிலோ
அரிசி                               -     1/2கிலோ
நெய்                                 -     3ஸ்பூன்
கிராம்பு                          -     4
லவங்கம்                        -     3
பட்டை                             -     3
ஏலக்காய்                       -    2
பிரியாணி இலை       -    1
இஞ்சிபூண்டுவிழுது  -    2ஸ்பூன்
வெங்காயம்                  -    2
தக்காளி                         -    1
பச்சை மிளகாய்         -    5
தேங்காய்ப் பால்        -    3கப்
உப்பு                                -    தேவைக்கேற்ப     
எண்ணெய்                   -    தேவையான பொருள்கள்
கொத்த மல்லி             -    சிறிதளவு
புதினா                            -    ஒரு கைப்பிடி
தயிர்                                -     4ஸ்பூன்

செய்முறை :

இறால் நன்றாக சுத்தம் செய்த பின் மஞ்சள் தூள்,  உப்பு சேர்த்து கழுவி வேண்டும் .அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் விட்டு,கிராம்பு, லவங்கப் பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும்.இறால் போட்டு புதினா ,கொத்தமல்லி,தயிர்     போட்டு நன்கு கிளறி விடவும். 3கப் தேங்காய்ப் பால்,ஊற்றி உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதி வந்தும் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் குக்கரை மூடவும்.1விசில் வந்தும் இறக்கவும் .
சுவையான இறால் புலாவ் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி --- 

TRUCKOHOLICS , ADS


Post a Comment

0 Comments