சுவையான கருணை கிழங்கு காரா குழம்பு SAMAYAL TAMIL TIPS

சுவையான  கருணை கிழங்கு  காரா குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
KarunaiKilanguKaraKuzhambu,SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

எண்ணெய்                          -   தேவையான அளவு
கடுகு                                      -   1/2ஸ்பூன்
உளுத்தப்பருப்பு               -    1/2ஸ்பூன்
வெந்தியம்                          -    1/2ஸ்பூன்
பூண்டு                                  -    5பல்
வெங்காயம்                       -    3
தக்காளி                               -    3
குழம்புமிளகாய்த்தூள்  -    3ஸ்பூன்
தேங்காய்                            -    3
கருணை கிழங்கு            -    1/4கிலோ
மல்லித்தூள்                       -    1/2ஸ்பூன்
புளி                                        -    லெமன் அளவு
மஞ்சள்தூள்                       -     1/2ஸ்பூன்
கொத்தமல்லி                   -     சிறிது

கருணைகிழங்கின் தோலினை நீக்கி  கழுவி அறுத்து சிறிய துண்டு ஆக  கட் பண்ண வேண்டும். பின் கருணை கிழங்கு வேக வைக்க வேண்டும் .

தேங்காய் தனியாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.வெங்காயம் - 2,தக்காளி சேர்த்து தனியாக அரைத்து கொள்ள வேண்டும்.புளி தனியாக கரைத்து வைத்து கொள்ள வேண்டும் .

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கருவேப்பிலை போட்டு தளித்து பின் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வதக்கிய பிறகு அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி ஊற்ற வேண்டும் .பின் வேக வைத்த கருணை கிழங்கு போட்டு குழம்புமிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,மல்லித்தூள், போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் .ஊற்றி பிறகு கரைத்து வைத்த புளி ஊற்றி பின் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதி வந்த பிறகு அரைத்து வைத்த தேங்காய் ஊற்ற வேண்டும் .குழம்பு நன்கு கெட்டியாகும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும் .
சுவையான கருணை கிழங்கு  காரா குழம்பு ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---    


TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments