கமகமக்கும் சுவையான முறையில் மட்டன் தம் பிரியாணி SAMAYAL TAMIL TIPS

கமகமக்கும் சுவையான முறையில் மட்டன் தம் பிரியாணி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .

MuttonDumBiryani ,SamayalTamilTips

தேவையான பொருள்கள் : 

பாஸ்மதி அரிசி               -  1/2கிலோ
மட்டன்                                -   1/2கிலோ
எண்ணெய்                       -   தேவையான அளவு   
நெய்                                    -   50கிராம் 
பட்டை                                -   2
கிராம்பு                             -    2
ஏலக்காய்                         -    2
பிரியாணி இலை         -    2
 தக்காளி                          -    3
வெங்காயம்                   -     4
பச்சை மிளகாய்           -    4
மிளகாய் தூள்                -    1ஸ்பூன்
மஞ்சள் தூள்                   -    1/4ஸ்பூன்
பிரியாணிமசாலாதூள்-  1ஸ்பூன்
உப்பு                                    -  தேவையான அளவு
தயிர்                                    -  1கப்
கொத்தமல்லி                  -  ஒரு கைப்பிடி
புதினா இலை                  -  ஒரு கைப்பிடி
இஞ்சிபூண்டுவிழுது      -  4ஸ்பூன
லெமன்                               -  1
 கேசரி பவுடர்                  -   சிறிது

வேகவைக்க வேண்டியவை:

முதலில் குக்கரில் மட்டன்,போட்டுஅத்துடன்,மஞ்சள்தூள்,இஞ்சி,பூண்டு விழுது,உப்பு ,பிறகு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் ஒரு கொதி வந்ததும் களைந்து வைத்திருக்கும் அரிசியை   தண்ணீரை நன்கு  வடித்து விட்டு சேர்க்கவும்.அரிசியை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்கவும் . அரிசி ஒரு கொதி வந்ததும் வடித்து கொள்ளவும்.பின் தனியாக வைத்து கொள்ளவும் .

செய்முறை :

பாத்திரதை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, இலை, கிராம்பு ஆகியவற்றை போட்டு  லேசாக பொரிந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.வெங்காயம் சிறிது வதங்கியதும்.பின் தக்காளி போட்டு  வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,பிரியாணி மசாலாதூள், போட்டு,வதக்கவும். பின், தயிர், லெமன், புதினா,கொத்தமல்லி,போட்டு நன்கு வதக்கவும். வேகவைத்த மட்டன் போட வேண்டும்.பின் 1டம்ளர் தண்ணீர் தயிர் சேர்த்து வடிகட்டிய சாதத்தை வேகவைத்த கறிகலவையில் போட்டு பரத்தி மேலே கேசரி பவுடர் ரெட் கலர் ஆங்காங்கே கொஞ்சம் தூவவும்,மீதி இருக்கும் மீதமுள்ள  நெய்யை மேலே விட்டு அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி,பிரியாணி பாத்திரம் மூடியையும் மூடி சிம்மில் 1/2மணி நேரம் வைக்கவும்.பிரியாணி பாத்திரத்தின் அடியில் பழைய தோசைக்கல் இருந்தால் வைத்தால் நெருப்பு அதிகம் இல்லாமல் தேவையான அளவுக்கு கிடைக்கும்.1/4மணி நேரம் கழித்து சிம்மில் உள்ள அடுப்பை அணைத்து விடவும்.பின்பு திரும்பவும். 1/4மணி நேரம் கழித்து திறந்து  கமகமக்கும் சுவையான மட்டன் தம் பிரியாணி ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..


நன்றி ---

truckoholics ads





Post a Comment

0 Comments