முந்திரி-தேங்காய் பால்கோவா SAMAYAL TAMIL TIPS

முந்திரி-தேங்காய் பால்கோவா செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் ..

MunthiriThengaiPalkova ,SamayalTamilTips

தேவையானவை : 

பால்                             -     1லிட்டர்
குங்குமப்பூ               -       ஒரு சிட்டிகை
சர்க்கரை                  -       2கப்
முந்திரி                      -       10
தேங்காய் துருவல்-        ஒரு கப்
நெய்                            -    4ஸ்பூன்
ஏலக்காய்த்தூள்     -      சிறிதளவு

செய்முறை : 

அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். பால் பாதியாகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். முந்திரி, தேங்காய் துருவலை சேர்த்து அரைத்து, காய்ச்சிய பாலுடன் கலந்து, மீண்டும் பாதியாக வந்ததும், சர்க்கரை சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டு, நெய் விட்டு, சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
முந்திரி-தேங்காய் பால்கோவா ரெடி ..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

truckoholics ads

Post a Comment

0 Comments