சுவையான ஆம்லெட் குழம்பு செய்வது எப்படி என்று இங்கு பார்கலாம். சமையல் தமிழ் டிப்ஸ்-ல் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
எண்ணெய் - 4ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
சீரகம் - 1/2ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2ஸ்பூன்
மிளகு தூள் - 1/2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1
இஞ்சிபூண்டு விழுது- 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
தேங்காய் - 1/4முடி
முந்திரி - 10
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
முந்திரி, தேங்காய் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் முட்டை, மிளகு தூள், சிறிது மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். நன்றாக அடித்த முட்டை தோசை கல்லில் ஊற்றி அதை சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்கு வதக்கிய பின்னர் தக்காளி விழுதை போட்டு நன்றாக கிளறவும். பிறகு தேங்காய் விழுது, 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
கிரேவி நன்றாக கொதித்து கெட்டியாகி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான ஆம்லெட் குழம்பு ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
எண்ணெய் - 4ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
சீரகம் - 1/2ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2ஸ்பூன்
மிளகு தூள் - 1/2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1
இஞ்சிபூண்டு விழுது- 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
தேங்காய் - 1/4முடி
முந்திரி - 10
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
முந்திரி, தேங்காய் மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் முட்டை, மிளகு தூள், சிறிது மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். நன்றாக அடித்த முட்டை தோசை கல்லில் ஊற்றி அதை சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்கு வதக்கிய பின்னர் தக்காளி விழுதை போட்டு நன்றாக கிளறவும். பிறகு தேங்காய் விழுது, 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
கிரேவி நன்றாக கொதித்து கெட்டியாகி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான ஆம்லெட் குழம்பு ரெடி ..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments