சுண்டக்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி என்பதை samayal tamil tips

வாருங்கள் சுண்டக்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி என்பதை சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம். 

                                                       
sundakka,i vathal, kulambu, samayal tamil tips
 

தேவையான பொருட்கள் :

நல்லெண்ணை                -        5ஸ்பூன்
கடுகு                                   -           1ஸ்பூன்
கருவேப்பிலை               -          10                   
உளுந்தம் பருப்பு            -          1/2ஸ்பூன்        
சிகப்பு மிளகாய்              -           4
பூண்டு                               -             10பல் 
பெரியவெங்காயம்        -          2  
தக்காளி                             -            2                                    
உப்பு                                   -             தேவையான அளவு
மஞ்சள் தூள்                  -              1/2டீஸ்பூன்
புளி                                     -            லெமென் அளவு
சாம்பார் தூள்                   -          1 ஸ்பூன்  
அரிசிமாவு                        -          2ஸ்பூன்

சுண்டக்காய் வத்தல்     -         50கிராம் 


அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:

சிகப்பு மிளகாய்             -      10
மல்லி                                -       2ஸ்பூன் 
பெரியவெங்காயம்     -       1       
தக்காளி                            -        1         

பாத்திரத்தில்நல்லெண்ணை 1ஸ்பூன் விட்டு,வெங்காயம்,தக்காளி,மிளகாய்,மல்லி, போட்டு  வதக்கவும்.பிறகு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை:


ஒரு கடாயில் நல்லெண்ணை ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு,  வெந்தயம்,கருவேப்பிலை சிகப்பு மிளகாய்   போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.மஞ்சள் தூள் சாம்பார் தூள்,போட்டு நன்கு வதக்கவும்.பிறகுஅரைத்த வைத்த பொருட்களை சேர்க்கவும்.அரிசிமாவு,தண்ணீரும்1கப்  சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு,கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டும் வரை கொதிக்க விட்டு, ஒரு கடாயில் நல்லெண்ணை ஊற்றி அதில் சுண்டக்காய் வத்தல் போட்டு நன்கு வதக்கவும்.பிறகு சுண்டக்காய் போட்டு கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். சுண்டக்காய் வத்தல் குழம்பு ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---




Post a Comment

0 Comments