எளிதான முறையில் முட்டை பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 10
பாசுமதி அரிசி - 1/2 கிலோ
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 2
கடைந்த தயிர் - 1 கப்
எண்ணெய் - 500 ml
நெய் - 1/4 கப்
உப்பு - 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி + பூண்டு - 4 டீஸ்பூன்
அரைக்கவும் :
பச்சை மிளகாய் - 4
பட்டை - 2
லவங்கம் - 2
ஏலக்காய் - 5
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி.
செய்முறைகள் :
* அரிசியைக் நன்றாக கழுவி ஊறவிடவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்று அரைத்துக்கொள்ளுங்கள்.
* முட்டை, 1/4 டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி இவற்றை சேர்த்து மிக்ஸியி ல் .அரைத்து கொள்ளுங்கள் .
* அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் ஊற்றி சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேகவிடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா, தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள சுருள வதக்கவும்.
* எண்ணெய் கக்கி வரும் போது, ஒரு கப் வென்னீர் விட்டு தளதளப்பாக இருக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்கவிடுங்கள்.
* இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வென்னீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு கிளறி ‘தம்’ போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
* முட்டை பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
தேவையான பொருட்கள் :
முட்டை - 10
பாசுமதி அரிசி - 1/2 கிலோ
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 2
கடைந்த தயிர் - 1 கப்
எண்ணெய் - 500 ml
நெய் - 1/4 கப்
உப்பு - 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி + பூண்டு - 4 டீஸ்பூன்
அரைக்கவும் :
பச்சை மிளகாய் - 4
பட்டை - 2
லவங்கம் - 2
ஏலக்காய் - 5
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி.
செய்முறைகள் :
* அரிசியைக் நன்றாக கழுவி ஊறவிடவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்று அரைத்துக்கொள்ளுங்கள்.
* முட்டை, 1/4 டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி இவற்றை சேர்த்து மிக்ஸியி ல் .அரைத்து கொள்ளுங்கள் .
* அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் ஊற்றி சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேகவிடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா, தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள சுருள வதக்கவும்.
* எண்ணெய் கக்கி வரும் போது, ஒரு கப் வென்னீர் விட்டு தளதளப்பாக இருக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்கவிடுங்கள்.
* இன்னொரு அடுப்பில், ஒரு பாத்திரத்தில் வென்னீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் முட்டை கலவையில் போட்டு கிளறி ‘தம்’ போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
* முட்டை பிரியாணி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---



0 Comments