சுவையான பச்சை பட்டாணி குருமா SAMAYAL TAMIL TIPS

சுவையான பச்சை பட்டாணி குருமா செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்:

எண்ணெய்                        -     தேவையான அளவு
பச்சை பட்டாணி            -     1கப்
உருளைக்கிழங்கு          -     2
வெங்காயம்                     -     3
தக்காளி                             -     4
பச்சைமிளகாய்              -     4
மிளகாய் தூள்                  -     1/2ஸ்பூன்
கரம் மசாலா தூள்          -     1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது    -      2ஸ்பூன்
கொத்தமல்லி                   -      தேவையான அளவு
உப்பு                                     -      தேவையான அளவு

உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி தனித்தனியாக வேக வைக்கவும். கொத்தமல்லி,பச்சைமிளகாய், அரைக்கவும்.2 தக்காளியை அரைத்து  எடுக்கவும்.

செய்முறை :

கடாயில் எண்ணை விட்டு பட்டை சோம்பு,லவங்கம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். வதங்கியதும்,அரைத்து வைத்த தக்காளி போட வேண்டும்.அரைத்த விழுதை போட்டு கொதிக்க விடவும்.பின் வேகவைத்த உருளைக்கிழங்கு,பச்சைப்பட்டாணி போட்டுஉப்பு ,கரம் மசாலா,மிளகாய் தூள்,சேர்த்து கொதிக்கவிடவும்.பின் தேவை யான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்த பிறகு தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
சுவையான பச்சை பட்டாணி குருமா ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

TRUCKOHOLICS , ADS


Post a Comment

0 Comments