சுவையான கருணை கிழங்கு சாம்பார் SAMAYAL TAMIL TIPS

சுவையான கருணை கிழங்கு சாம்பார்  செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் . 

KarunaiKilanguSambar , SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

துவரப்பருப்பு                    -  100கிராம்
கருணை கிழங்கு            -  1/4கிலோ
எண்ணெய்                         -  தேவையான அளவு
கடுகு                                     -  1/2ஸ்பூன்
சீரகம்                                   -  1ஸ்பூன்
பூண்டு                                 -  6பல்
பெருங்காயம் தூள்       -   1/4ஸ்பூன்
உளுத்தம்பருப்பு            -   1/4ஸ்பூன்
குழம்புமிளகாய் தூள்  -   3ஸ்பூன்
மஞ்சள்தூள்                      -  1/2ஸ்பூன்
வெங்காயம்                    -   2
தக்காளி                            -    3
பச்சை மிளகாய்           -    2
காய்ந்த மிளகாய்         -    2
கருவேப்பிலை              -     சிறிது
கொத்தமல்லி                -     தேவையான அளவு

வேக வைக்க வேண்டியவை :

முதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு,அத்துடன் மஞ்சள் தூள் பச்சை மிளகாய் - 2  வெங்காயம்-1,தக்காளி -3பூண்டு ,சீரகம்-1/2ஸ்பூன் , பெருங்காயத் தூள்,சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

கருணை கிழங்கு  தோலினை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.பின் கழுவி தனியாக வைத்து கொள்ள வேண்டும்.

செய்முறை :

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , உளுத்தம்பருப்பு, சீரகம், தாளிக்கவும்.பின் வெங்காயம் போட்டு பின் கருணை கிழங்கு  போட்டு தளித்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழம்பு மிளகாய்த்தூள் போட்டு,நன்கு கொதி வந்தும் வேக வைத்த பருப்பை ஊற்றி சாம்பார் கொதி வந்தும் புளி கரைசலை ஊற்றி பிறகு கொத்தமல்லி  தூவி இறக்கவும். சுவையான கருணை கிழங்கு   சாம்பார் ரெடி...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

TRUCKOHOLICS ,ADS

Post a Comment

0 Comments